-
வரவு
சகல மாணவர்களும் காலை பாடசாலை ஆரம்பிப்பதற்கு 15
நிமிடங்களுக்கு முன்னர் கல்லூரியில் சமூகமளித்திருத்தல் வேண்டும்.
தகுந்த காரணங்களுக்காக முன் அனுமதி பெற்ற மாணவர்கள் மாத்திரமே
பாடசாலை வேளையில் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர்.
பாடசாலை நேரங்களில் வகுப்பறைகளின் வெளியே நடமாடுதல் முற்றிலும்
தடைசெய்யப்பட்டுள்ளது.
பாடசாலைக்கு தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு மேல் வருகை தராத
மாணவர்கள் பெற்றோருடன் வருகைதர வேண்டும்.
பாடசாலைக்கு தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு மேல் வருகை தராத
மாணவர்கள் பெற்றோருடன் வருகைதருவதோடு, வைத்திய சான்றிதழ்
முன்வைத்தல் வேண்டும்.
பிள்ளைகள் பாடசாலைக்கு வருகைத்தர தவறுமிடத்து பெற்றோர்
பெற்றோர் அல்லது சட்டபூர்வ பாதுகாவலர் மாத்திரமே பாடசாலைக்கு
அழைத்து வர வேண்டும்.
பாடசாலை நேரங்களில் வேறு வைபவங்களில் கலந்துக்கொள்ளல்
கூடாது.
பொது விடயங்கள்
மாணவர் தொடர்பாடல் புத்தகம் ஒவ்வொரு மாணவரிடமும் இருத்தல்
வேண்டும்.
கல்லூரி பொதுக்கூட்டம் சிரமதானம் போன்றவற்றில் பெற்றோர்
கலந்துக்கொள்வது கட்டாயமாகும்.
கையடக்க தொலைப்பேசி ,software மென்பொருட்கள் , வன்தட்டு ,
தகாத வெளியீடுகள், சஞ்சிகைகள், என்பவற்றை கொண்டுவருதல்
கூடாது.
பொது இடங்களில் ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் நடந்துக்கொள்வதுடன்
பாடசாலை நற்பெயருக்கு பங்கம் ஏற்படும் விதத்தில் செயற்படகூடாது.
2 மணிக்கு பின்னர் மாணவர்கள் சீருடையுடன் கடைகளில் சலூன்களில் மற்றும் பஸ்
தரிப்பிடங்களில் கூடி நிற்பது தடை செய்யப்பட்டுள்ளது.
பாடசாலை நிறைவுற்றவுடன் வரும் முதல் பஸ்சில் ஏறி வீட்டிற்கு
செல்லுதல் வேண்டும்.
பாடவேளைகளில் ஆசிரியரை சந்திப்பது முற்றிலும்
தடைசெய்யப்பட்டுள்ளது.
பாடசாலை விடுகைப்பத்திரம் , நற்சான்றிதழ் , சா.தர / உ.தர
பெறுபேற்று சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் ஒரு
கிழமைக்கு முன்பதாக(வியாழக்கிழமைகளில்) பாடசாலையில்
இதற்கு பொறுப்பான ஆசிரியரிடம் கோரிக்கை கடிதத்தினை
வழங்குதல் வேண்டும்
(சான்றிதழ்கள் வழங்கப்படுவதும் வியாழக்கிழமைகளில் 1.30 மணிக்கு
பிறகு மட்டுமே)
பொது இடங்களில் மாணவர்கள் ஒழுக்கத்தை பேணுவது கட்டாயமானது
தவறுமிடத்து தண்டனைக்கு ஆளாக நேரிடும்.
வீதி ஒழுங்குகளை பின்பற்றுதல் கட்டாயமானது.
- Home
- பள்ளி பற்றி
- விதிகள்